மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்


மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
x

மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

பெரம்பலூர்

மகாளய அமாவாசை

ஆண்டுதோறும் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே புளியங்குளம் எனப்படும் நகராட்சி தெப்பக்குளத்தில் காலை 6 மணி முதலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.

அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் செய்தனர்.

தர்ப்பணம் கொடுத்தனர்

புரோகிதர்கள், சிவாச்சாரியர்கள் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை ஒன்றாக வரிசையாக அமரவைத்து, அவர்களின் மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர். அப்போது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபட்டு, அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். அதிகாலை தொடங்கிய தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு மதியம் வரை நடந்தது.

இதேபோல் பெரம்பலூரை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


Next Story