வருகிற 5-ந்தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியீடு


வருகிற 5-ந்தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியீடு
x

வருகிற 5-ந்தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டில் வருகிற 5-ந்தேதி முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

பொதுநல வழக்கு

நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணபிரசாத் ஆகியோர் பொதுநல வழக்குகள், அனைத்து வகையான டிவிஷன் பெஞ்ச் ரிட் மனுக்கள், 2018-ம் ஆண்டில் இருந்து தாக்கலான அப்பீல் மனுக்கள், கிரிமினல் அவமதிப்பு உள்ளிட்ட அவமதிப்பு நடவடிக்கை கோரும் வழக்குகள், 2021-ம் ஆண்டில் இருந்து தாக்கலான சிவில் அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றனர்.

நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் ஆட்கெணர்வு மனுக்கள், கிரிமினல் அப்பீல் மனுக்கள் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் உள்பட), 2017-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள ரிட் அப்பீல் மனுக்கள், 2020-ம் ஆண்டு வரை தாக்கலான சிவில் அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றனர்.

நீதிபதி சேஷசாயி, கடந்த 2016-ம் ஆண்டு வரை தாக்கலான 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி பவானி சுப்பராயன், பொது சிவில் சிறு வழக்குகள், கனிமங்கள் மற்றும் தாதுக்கள் தொடர்பான வழக்குகள், நிலச்சீர்திருத்தச்சட்டம் சம்பந்தமான வழக்குகள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், சுதந்திர போராட்டத்தியாகி பென்சன் மனுக்கள், விவசாய உற்பத்தி சந்தை வழக்குகளையும் (2017-ம் ஆண்டு முதல் தாக்கலானவை), இதேபோல 2017-ம் ஆண்டு முதல் தாக்கலாகி வேறு நீதிபதிகள் விசாரிக்காத ரிட் மனுக்களையும் விசாரிக்கிறார்.

ஜாமீன், முன்ஜாமீன்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2018-ம் ஆண்டு முதல் தாக்கலான தொழிலாளர் மற்றும் சேவை தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறார்.

நீதிபதி தாரணி, ஜாமீன், முன்ஜாமீன் சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களையும், 2019-ம் ஆண்டு வரை தாக்கலான கிரிமினல் அப்பீல் மனுக்கள், கிரிமினல் ரிவிஷன் மனுக்களையும் விசாரிக்கிறார்.

நீதிபதி புகழேந்தி 2017-ம் ஆண்டு முதல் தாக்கலான 2-ம் நிலை அப்பீல் மனுக்களையும், சிவில் ரிவிஷன் மனுக்கள், இடமாற்ற சிவில் மனுக்கள், நிறுவன அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், 2020-ம் ஆண்டு வரை தாக்கலான சிவில் சிறு அப்பீல் மனுக்கள், 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி இளங்கோவன், சி.பி.ஐ., ஊழல் தடுப்பு வழக்குகள் (ஜாமீன், முன்ஜாமீன் தவிர), குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவுகள் 407, 482 ஆகியவற்றின்கீழ் தாக்கலாகும் கிரிமினல் வழக்குகள், 2020-ம் ஆண்டில் இருந்து தாக்கலான கிரிமினல் அப்பீல், கிரிமினல் ரிவிஷன் மனுக்களை விசாரிக்கிறார்.

வரிகள், தொழில்துறை

நீதிபதி சத்திகுமார், 2020-ம் ஆண்டில் இருந்து தாக்கலான கிரிமினல் மற்றும் ரிட் வழக்குகளை விசாரிக்கிறார்.

நீதிபதி முரளிசங்கர், 2021-ம் ஆண்டில் இருந்து தாக்கலான சிவில் சிறு முதல் நிலை அப்பீல் மனுக்கள், 2-ம் நிலை சிவில் சிறு அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி ஸ்ரீமதி, 2017-ம் ஆண்டு வரை தாக்கலான தொழிலாளர் மற்றும் சேவை தொடர்பான மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி விஜயகுமார், 2016-ம் ஆண்டு வரை தாக்கலான கனிமங்கள், நிலச்சீர்திருத்தச்சட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், தியாகி பென்சன், விவசாய உற்பத்தி சந்தை தொடர்பான மனுக்களையும் வேறு நீதிபதி விசாரிக்காத ரிட் மனுவையும் விசாரிக்கிறார்.

நீதிபதி முகமது சபீக், வரிகள், சுங்கம் மற்றும் கலால் வரி, வனம், தொழில்துறை, அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரிய வழக்குகளை விசாரிக்கிறார்.


Next Story