புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு


புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:46 PM GMT)

நீடாமங்கலம் பகுதி கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கொண்டனர். ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதி் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story