ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, மிளகாய் கொள்முதல்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, மிளகாய் கொள்முதல்
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, மிளகாய் கொள்முதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின்கீழ் செயல்படும் எட்டிவயல் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் ராமநாதபுரம் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் மிளகாய் வத்தல் 448 கிலோ கொண்டு வந்து குவிண்டால் ரூ.19,400-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.17,520-க்கும் மொத்தம் ரூ.74,378-க்கு விற்பனை செய்தனர். பருத்தி 57 கிலோ கொண்டு வந்து குவிண்டால் ரூ.6,900-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.6,500-க்கும் மொத்தம் ரூ.3,769-க்கும் விற்று பயனடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் முதுகுளத்தூர் மற்றும் இதர சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் மிளகாய் வத்தல் 1500 கிலோ கொண்டு வந்து குவிண்டால் ரூ.18,300-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16,500-க்கும் மொத்தம் ரூ.2,41,872-க்கு விற்பனை செய்தனர். பருத்தி 202 கிலோ கொண்டு வந்து குவிண்டால் ரூ.6,600-க்கும் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ரூ.6,500-க்கும் மொத்தம் ரூ.13,332-க்கும் விற்று பயனடைந்துள்ளனர்.

ஏலத்தில் உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். இந்த வசதியினை விவசாயிகள் பயன்படுத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை லாபகரமான விலைக்கு விற்று பயனடையுமாறு ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா தெரிவித்தார்.

1 More update

Next Story