குறுவை பருவத்தில் 82 ஆயிரத்து 622 டன் நெல் கொள்முதல்


குறுவை பருவத்தில் 82 ஆயிரத்து 622 டன் நெல் கொள்முதல்
x

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை குறுவை பருவத்தில் 82 ஆயிரத்து 622 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

ஆலத்தம்பாடி:

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை குறுவை பருவத்தில் 82 ஆயிரத்து 622 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெல் கொள்முதல் பதிவேடு, சாக்குக்கள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டினையும், நெல் மூட்டை எடைஎந்திரத்தின் செயல்பாட்டினையும் ஆய்வு செய்து விவசாயிகளுடன் நெல் கொள்முதல் தொடர்பாக கலந்துரையாடினார்.

பல்நோக்கு பேரிடர் மையம்

தொடர்ந்து முத்துப்பேட்டை அருகே கற்பகநாதர்குளம் கிராமத்திலுள்ள பல்நோக்கு பேரிடர் மையத்தை பார்வையிட்டு அங்கு சாய்தளம், குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கள்ளிக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயலை பார்வையிட்டார். இதையடுத்து தில்லைவிளாகம் கிராமத்தில் தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

82,622 டன் நெல் கொள்முதல்

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கு கடந்த மாதம்(செப்டம்பர்) 1-ந்தேதி முதல் 328 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82 ஆயிரத்து 622 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 8,425 விவசாயிகள் பயடைந்துள்ளனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கான தொகையாக ரூ.91 கோடியே 21 லட்சத்து 2 ஆயிரத்து 360-ஐ அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, தாசில்தார் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story