லால்குடி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்


லால்குடி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
x

லால்குடி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி

லால்குடி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன், ஆணையர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் லால்குடி பாரதி நகர் செல்லும் நுழைவுவாயில் தென்புறத்தில் குடிநீர் தொட்டி இருந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். லால்குடி ரவுண்டானா அருகில் பூவாளூர் சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதில் அளித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story