புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


புத்து மாரியம்மன் கோவில்  கும்பாபிஷேகம்
x

வாணியம்பாடி அருகே புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் அமைந்துள்ள புத்துமாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார்.

கும்பாபிஷேகம் நிறைவுற்றதை தொடர்ந்து, அடுத்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேக விழாவில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வாணியம்பாடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



Next Story