நாயை கொன்ற மலைப்பாம்பு


நாயை கொன்ற மலைப்பாம்பு
x

வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையில் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த நாயை மலைப்பாம்பு கொன்றது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையில் வனப்பகுதியில் தெருநாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த மலைப்பாம்பு நாயை லாவகமாக பிடித்து சுற்றி கொண்டது. நாயின் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது மலைப்பாம்பு நாயை விழுங்க முயற்சி செய்தது தெரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு கூடி சத்தம் போட்டதால் மலைப்பாம்பு நாயை கொன்று விட்டு சென்றுவிட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனர். மலைப்பாம்பு சுற்றி பிடித்ததால் நாய் செத்தது. இதையடுத்து பொதுமக்கள் நாயின் உடலை அடக்கம் செய்தனர்.

1 More update

Next Story