குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி நுழையும் மலைப்பாம்புகள் பொதுமக்கள் அச்சம்


குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி நுழையும் மலைப்பாம்புகள் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 23 Jan 2023 6:45 PM GMT (Updated: 23 Jan 2023 6:45 PM GMT)

குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி நுழையும் மலைப்பாம்புகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ளது கரிசல்பட்டி கிராமம். இதற்கு அருகில் நல்லியம்பட்டி குட்டு என அழைக்கப்படும் மலைப்பகுதி உள்ளது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா். பின்னா் வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து மலைப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இந்த நிலையில் மீண்டும் அப்பகுதியில் சுமார் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு நுழைந்துள்ளது. இதையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தொிவித்தனா். வனத்துறையினா் அந்த பாம்பை மலைப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி நுழையும் மலைப்பாம்புகளால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


Next Story