சிவகங்கை அருகே பந்தயம்: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


சிவகங்கை அருகே பந்தயம்: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
x
தினத்தந்தி 5 Oct 2023 7:00 PM GMT (Updated: 5 Oct 2023 7:01 PM GMT)

சிவகங்கை அருகே நடந்த பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.

சிவகங்கை

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே ஈசனூரில் 2-வது ஆண்டாக மாட்டு வண்டி பந்தயம் பெருமாள்பட்டி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 49 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை நெம்மலிக்காடு ஓம்உடையார் அய்யனார் மற்றும் பூலாங்கால் தொட்டிச்சியம்மன் வண்டியும், 3-வது பரிசை மேலூர் அழகன்கவுசிக் மற்றும் சென்னை மன்னன் பிலிம்ஸ் வண்டியும், 4-வது பரிசை அவனியாபுரம் முருகன் நகைக்கடை வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 36 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கே.புதுப்பட்டி காசிதருண் வண்டியும், 2-வது பரிசை ஈசனூர் கார்மேகம் மற்றும் பண்ணைபுரம் துளசிநாகராஜ் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை எஸ்.பி.பட்டினம் எஸ்.ஆர்.எம்.ரபீக் வண்டியும், 4-வது பரிசை காலக்கண்மாய் வட்டாயுதமுடைய அய்யனார் மற்றும் ஆட்டுக்குளம் பாபு ஆகியோர் வண்டியும் பெற்றது.

பரிசு

பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை ஏனாதி ஏ.டி.என்.பூங்குளத்தான் வண்டியும், 2-வது பரிசை திருச்சி செந்தில்பிரசாத் மற்றும் ஈசனூர் கண்ணன் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை கொட்டக்குடி முத்துராமன் மற்றும் பொன்பேத்தி மருதுபாண்டியவல்லாத்தேவர் வண்டியும், 4-வது பரிசை வல்லாளபட்டி கர்க்கத்தா மற்றும் நல்லாங்குடி சசிக்குமார் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ேபாட்டியில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.


Next Story