கம்பு பயிரில் 3 அடி உயரத்துக்கு கதிர்


கம்பு பயிரில் 3 அடி உயரத்துக்கு கதிர்
x
தினத்தந்தி 2 July 2022 9:00 PM GMT (Updated: 2 July 2022 9:01 PM GMT)

ஓமலூர் அருகே விவசாய தோட்டத்தில் கம்பு பயிரில் 3 அடி உயரத்துக்கு கதிர் வெளிவர தொடங்கி உள்ளது. இதனை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை ஊராட்சி வாலியான் தோப்பு பகுதி சேர்ந்தவர் தனீஸ்வரன். விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு 110 நாளில் அறுவடைக்கு வரும் புதிய ரக கம்பான துருக்கி ரகத்தை பயிரிட்டிருந்தார். 45 முதல் 50 நாட்களில் கம்பு கதிர் வெளிவர தொடங்கியது. இதில் கம்பு கதிர் நீளம் 3 அடி முதல் 5 அடியாகவும், தட்டு 6 முதல் 7 அடி உயரமும் இருந்தது. இந்த புதிய ரக கம்பு கதிர்களை அக்கம்பக்கம் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இது குறித்து விவசாயி தனீஸ்வரன் கூறும்போது, இந்த புதிய ரக கம்பை பயிரிட்டால் அதிக விளைச்சல் கிடைக்கும். சாதாரண ரக கம்புகளில் ¾ அடி உயரத்துக்கு கதிர் இருக்கும். ஆனால் இதில் சுமார் 3 முதல் 5 அடி உயரம் வரை கதிர் உள்ளது. 3 மடங்கு லாபம் கிடைக்கும். தற்போது 200 கிராம் விதை கம்பில் இருந்து சுமார் 300 கிலோ கம்பு கிடைத்துள்ளது என்றார்.


Next Story