மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x

கொட்டாம்பட்டி அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள காடம்பட்டியில் உள்ள தொட்டிச்சி அம்மன் கோவில் மற்றும் சோனையன் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மஞ்சுவிரட்டை காண்பதற்கு ஏராளமானோர் குவிந்தனர். கிராமத்தினர் ஜவுளி எடுத்து கொண்டு ஊர்வலமாக மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு நடைபெறும் தொழுவத்திற்கு வந்தனர். அங்கு வழிபட்ட பின்னர் கிராம கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன் பின்னர் அனைத்து காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

பெண்கள்,குழந்தைகள், முதியவர்கள் மஞ்சுவிரட்டை காண்பதற்கு டிராக்டர், மினிவேன், கார் மீது அமர்ந்து கண்டுகளித்தனர். இந்த மஞ்சுவிரட்டில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்.


Related Tags :
Next Story