ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்


ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே நெம்பர் 10 முத்தூரில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் கிணத்துக்கடவு, கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, காங்கேயம், மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளை மாடு ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் 2 பல் காளைகளுக்கு 200 மீட்டர் தூரமும், 6 பல் காளைகளுக்கு 300 மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது.

ரேக்ளா போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடக்க காளைகள் சீறிப்பாய்ந்து சென்றதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசளிக்கப்பட்டது. முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும், 2-ம் பரிசாக 4 கிராம் தங்க நாணயமும், 3-ம் பரிசாக 2 கிராம் தங்க நாணயமும், 4-ம் பரிசு முதல் 10-ம் பரிசு வரை ஒரு கிராம் தங்க நாணயமும், 11-ம் பரிசு முதல் 20-ம் பரிசு வரை கோப்பைகளும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற மற்ற காளைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக ரேக்ளா பந்தயம் நடக்கும் பகுதியில் கிணத்துகடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story