ராகுல் காந்தி நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது- சீமான் பேட்டி


ராகுல் காந்தி நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது- சீமான் பேட்டி
x

ராகுல் காந்தி நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

பெரம்பலூர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராகுல் காந்தி தினமும் நடக்கின்றார். அதனால் என்ன நடந்து விடப்போகிறது?. ஒன்றும் நடக்காது. அவர் தினமும் நடக்கிறார். காலையில் ஒன்றேகால் மணி நேரம், மாலையில் ஒன்றேகால் மணி நேரம். அவர் நடைபயிற்சி எடுக்கிறார். இதனால் எந்த மாற்றம் வந்துவிடப்போகிறது?. 50 ஆண்டுகள் இந்த நாட்டை ஆளுகின்ற போது ஏற்படுத்தாத மாற்றத்தை இந்த நடைபயணம் செய்யும் 3 மாத காலத்தில் ஏற்படுத்தி விடப்போகிறது? நடந்து மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார் என்றால் எப்படி? மாற்றம் வரும் என்றால் எல்லோரும் நடக்க வேண்டியது தானே! ராகுல் காந்தி நடந்து எந்த கட்சியை ஒருங்கிணைக்க முடியும்? முதலில் தேசிய ஒற்றுமையை ஒருங்கிணைக்க வேண்டும். நடந்து சென்று கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள மின் கட்டண உயர்வை 99 சதவீத மக்கள் எதிர்த்து தான் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். முதல்வர், மக்கள் கருத்திற்கானவரா? நலனிற்கானவரா என்ற கேள்வி உள்ளது. நாட்டை ஆளுகின்ற முதல்வரின் கருத்து தான் என்ன? அ.தி.மு.க. ஆட்சியில் மின் கட்டண உயர்விற்கு அப்போது கொரோனாவை விட மிக கொடுமையானது என்றார். எதிர்க்கட்சியாக உள்ளபோது ஒரு கருத்தை கூறுகிறார். ஆளுங்கட்சியாக இருக்கும்போது வேறொரு கருத்தை கூறுகிறார். நீங்கள் என்னதான் சொல்ல வருகின்றீர்கள். எதை எதிர்தீர்களோ அதை நடைமுறைப்படுத்துகிறீர்கள். கோவில்களில் தமிழிலும் தொடர்ந்து அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழில் வழிபாடு உள்ளது தான் நடைமுறை. வழிபாடு என் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story