ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2023 11:30 PM GMT (Updated: 11 Oct 2023 11:31 PM GMT)

திண்டுக்கல்லில் ரெயில்வே கூடுதல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ரெயில்வே கூடுதல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட துணை செயலாளர் கார்த்திக் சங்கிலி தலைமை தாங்கினார். இதில் கிளை செயலாளர் காட்டுராஜா, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரெயில்வே கேட்டுகளில் ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதை கைவிட வேண்டும், ரெயில் பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருக்கக்கூடாது. படித்த இளைஞர்களுக்கு ரெயில்வேயில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story