நாமக்கல் மாவட்டத்தில்இன்று முதல் 5 நாட்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில்இன்று முதல் 5 நாட்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 1 Sep 2023 7:00 PM GMT (Updated: 1 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று 16 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 10 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்திலும், நாளை மற்றும் 6-ந் தேதி மணிக்கு 12 கி.மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் மற்றும் 5-ந் தேதி 14 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். இன்றும், நாளையும் மேற்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 90, 90, 80, 80, 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 50, 50, 40, 40,50 சதவீதமாகவும் இருக்கும்.

பரவலாக மழை

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய் அயர்ச்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியினை நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் உயிர் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story