மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு


மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
x

வேதாரண்யம் பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி

நாகை மாவட்டம் வேதாரண்யத்ைத அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. .

உப்பு உற்பத்தியில் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

பரவலாக மழை

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்ததால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டன. உப்பள பாத்திகளில் சேமித்து வைத்திருந்த உப்பை சேகரித்து பனை மட்டை, தார்ப்பாய் போட்டு மூடி வைக்கும் பணியிலும், உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

பாத்திகளில் தேங்கியுள்ள தண்ணீரை மின் மோட்டார் வைத்து இறக்கும் பணியிலும் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒருவார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.இந்த மழை குறுவை சாகுபடிக்கு ஏற்றது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Next Story