அரியலூர், உடையார்பாளையம் பகுதிகளில் மழை


அரியலூர், உடையார்பாளையம் பகுதிகளில் மழை
x

அரியலூர், உடையார்பாளையம் பகுதிகளில் மழை பெய்தது.

அரியலூர்

தொடர் மழை

அரியலூர் நகரில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் அடிக்கும் நிலையில், மாலை நேரத்தில் மழை பெய்கிறது. இதனால் சாலை பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து செல்கிறது.

குறிப்பாக மாலை 4 மணி அளவில் மழை பெய்வதால், பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். மேலும் தினமும் மழை பெய்வதால் சாலையோர வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடையார்பாளையம்

உடையார்பாளையம் பகுதியில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இடையிடையே மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து மாலையில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.

இதில் உடையார்பாளையம், கழுமங்கலம், முனியத்திரையான்பட்டி, தத்தனூர், மணகெதி, வெண்மான்கொண்டான், விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், நடுவலூர், காடுவெட்டாங்குறிச்சி, பருக்கல், பரணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story