மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம்


மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம்
x

வடகீரனூரில் மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடகீரனூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கினார். அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா முன்னிலை வகித்தார். முகாமில் முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு திட்டம் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சொட்டு நீர் பாசனத்தின் பயன்பாடுகள், மண் மாதிரி சேகரிப்பின் அவசியம், இயற்கை விவசாயம், ஊடு பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், உழவன் செயலி பயன்பாடுகள், ஆத்மா திட்ட பணிகள், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. இந்த முகாமில் உதவி தொழில்நுட்ப மேலாளர் மேரி ஆனந்தி, பயிர் மதிப்பீட்டு ஆய்வு பணியாளர்கள் வல்லரசு, ஏழுமலை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண் அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story