அரசு ஆஸ்பத்திரியில் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு


அரசு ஆஸ்பத்திரியில் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு
x

சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன்படி சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த வேண்டும் என்று வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.9 கோடியில் பன்னோக்கு மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அங்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான இடங்களையும் பார்வையிட்டார்.

பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் ராஜசேகரன், உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், செயற்பொறியாளர் அழகர்சாமி, உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர், உதவி பொறியாளர்கள் சுரேந்தர், பாக்கியநாதன் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.


Next Story