குளித்தலையில் நடந்த ரேக்ளா பந்தயம்


குளித்தலையில் நடந்த ரேக்ளா பந்தயம்
x

குளித்தலையில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் ெவற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

கரூர்

ரேக்ளா பந்தயம்

கரூர் மாவட்டம், குளித்தலையில் மணத்தட்டை இளைஞர்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நேற்று நடந்தது. இதில், 400 மீட்டர் ஓட்டப்போட்டி, மினி மாரத்தான், பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை, தேன் சிட்டு, சிறிய மற்றும் பெரிய ஒற்றை மாடு போன்ற பந்தயம் நடத்தப்பட்டன. குளித்தலை - மணப்பாறை சாலையில் நடந்த பந்தயம் தொடங்கிய இடத்தில் இருந்து ஒவ்வொரு பந்தயமும் நிர்ணயிக்கப்பட்ட எல்லை தூரத்தை தொட்டு மீண்டும் பந்தயம் நடத்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாடு, குதிரைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு

கரூர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். ரேக்ளா பந்தைய ரசிகர்கள், பொதுமக்கள் நின்றுகொண்டு ஒவ்வொரு பந்தயத்தையும் கண்டுகளித்தனர். குளித்தலை போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story