பள்ளிபாளையத்தில்அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளியிலிருந்து தொடங்கிய ஊர்வலம் இ.ஆர்.தியேட்டர், பெரியார் நகர், காந்திபுரம், அக்னி மாரியம்மன் கோவில், பாரதியார் தெரு போன்ற பகுதிகள் வழியாக சென்று முடிவில் பள்ளி வளாகத்தில் நிறைவுபெற்றது. இந்த ஊர்வலத்தில் பள்ளியின் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே அரசு பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





