நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும்; தமிழக அரசு தலைமை காஜி


நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும்; தமிழக அரசு தலைமை காஜி
x

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 11-ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஷவ்வால் மாத பிறை தெரியவில்லை. எனவே நாளை மறுநாள் (வியாழன்) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஈதுல் பித்ர் (ரமலான் பண்டிகை) வியாழக்கிழமை (11ந் தேதி) கொண்டாடப்படும். மேற்கண்ட தகவலை தமிழக அரசு தலைமை காஜி முகம்மது சலாகுத்தீன் அய்யூப் வெளியிட்டுள்ளார்.


Next Story