ராமநதி அணையின் நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி


ராமநதி அணையின் நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
x

ராமநதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடையம்,

தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உச்சநீர்மட்டம் 84 அடி கொண்ட ராமநதி அணை உள்ளது. இந்த அணையி மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர்க்கும் மேல் விவசாய நிலங்கள், 20 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகள் ஆகியவற்றை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில், போதிய மழை இல்லாததால் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து குறைந்து காணப்பட்டு, அணையின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காண்பப்டுகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர தொடங்கியது.

கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடி உயர்ந்து 63 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு 86 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து 5 கன அடி நீர் வெளியேற்றமும் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story