ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு


ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
x

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு

ராமநாதபுரம்

ராமேசுவரம்

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் நடுக்கடலில் மீனவர்களின் ஜி.பி.எஸ். கருவிகளையும் அவர்கள் பறித்து சென்றனர்.

மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களை நிறுத்தி ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.

இதனால் அந்த பகுதியில் இருந்து தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று காலை திரும்பினர். இதனிடையே கச்சத்தீவுக்கும்-கோடியகரைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் வைத்திருந்த ஜி.பி.எஸ். கருவிகளை இலங்கை கடற்படையினர் பறித்தனர். மேலும் அவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

இலங்கை கடல் பகுதியில் சீன உளவு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் ஜி.பி.எஸ். கருவிகளை பறித்து விரட்டி உள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story