நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:45 PM GMT)

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததுடன், வலைகளையும் அறுத்து வீசி அத்துமீறலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

விரட்டியடிப்பு

இலங்கை சிறையில் ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 27 மீனவர்கள் தவிக்கின்றனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 16-ந் தேதியில் இருந்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக நேற்றும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அதேநேரத்தில் சிறிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் மட்டும் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்று முன்தினம் முதல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் விரட்டியடிப்பு

70-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 400-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தும், 2 படகுகளில் ஏறி மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்தும் எறிந்துள்ளனர்.

இதனால் இலங்கை கடற்படைக்கு பயந்து நேற்று காலை மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் அந்த மீனவர்கள் கரை திரும்பினர். இலங்கை கடற்படையின் இந்த செயலுக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


Next Story