யுகாதி பண்டிகையையொட்டிநாமக்கல்லில் பெண்களுக்கான கோலப்போட்டி

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் நேற்று நாமக்கல்லில் யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் மணமாலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வண்ண கோலங்களை போட்டு பெண்கள் அசத்தினர். இதேபோல் சிறுவர், சிறுமிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனப்போட்டி, மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட தலைவர் வெங்கட்ட சுப்பிரமணியன், செயலாளர் நாராயணன், பொருளாளர் தங்கவேல், இளைஞர் அணி தலைவர் சக்தி வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





