மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

ஆண்டிமடம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர்

பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் செந்தில் (வயது 43). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத, திருமணமாகாத 32 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து, பலமுறை கொலை மிரட்டி விடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அந்த பெண் கர்ப்பமடைந்தார். இதுகுறித்து அப்பெண்ணின் உறவினர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 25.01.2017 அன்று அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், செந்திலை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்த வழக்கு அரியலூர் மகளிர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி செந்திலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ராஜா ஆஜரானார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணுக்கு கடந்த 2017-ம் ஆண்டே பெண்குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story