முத்துமாரியம்மன் கோவிலில் ரத உற்சவம்


முத்துமாரியம்மன் கோவிலில் ரத உற்சவம்
x

விழுப்புரம் முத்துமாரியம்மன் கோவிலில் ரத உற்சவம் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பீமநாயக்கன்தோப்பில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு 97-வது பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் எந்திர விமானம், அன்ன வாகனம், பூத வாகனம், நாக வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் முத்துமாரியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக அலகு குத்துதலும், ரத உற்சவமும் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் அந்த தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன் பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story