செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டம், பாலூர், செய்யூர் வட்டம் அம்மனூர், மதுராந்தகம் வட்டம் ஓணம்பாக்கம், திருக்கழுக்குன்றம் வட்டம் குடிபேரம்பாக்கம், திருப்போரூர் வட்டம் அருங்குன்றம் மற்றும் வண்டலூர் வட்டம் சிறுசேரி போன்ற கிராமங்களில் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.


Next Story