ரேஷன் அரிசி வந்தது

தஞ்சாவூரில் இருந்து குமரிக்கு 1,350 டன் ரேஷன் அரிசி வந்தது
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பொது வினிேயாக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி கொண்டுவரப்படுகிறது. அதன்படி, தஞ்சாவூரில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 1,350 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 23 வேகன்களில் வந்த அரிசி நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு, குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டது.
----
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





