ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

பாவூர்சத்திரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம்:
நெல்லை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார், கீழப்பாவூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து லோடு வேன் டிரைவரான கீழப்பாவூரைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 38) என்பவரை கைது செய்தனர். மேலும் 440 கிலோ ரேஷன் அரிசியுடன் லோடு வேனையும் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





