மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 மூட்டைகளில் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய குலவணிகர்புரத்தை சேர்ந்த கனி (வயது 31) என்பவர் சிக்கினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கனியை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிள், அரிசியை பறிமுதல் செய்தனர்.


Next Story