மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 மூட்டைகளில் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய குலவணிகர்புரத்தை சேர்ந்த கனி (வயது 31) என்பவர் சிக்கினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கனியை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிள், அரிசியை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





