ரேஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


ரேஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கூடலூர் அருகே ரேஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன் (வயது 55). இவரது மனைவி ராதிகா (48). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. தற்போது மதியழகன் ஆங்கூர்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மதியழகனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ராதிகா கோபித்துக் கொண்டு மகனுடன் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த மதியழகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story