நாமக்கல்லில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


நாமக்கல்லில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

நாமக்கல்லில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் அதன் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

நாமக்கல்:

1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் நாமக்கல்-திருச்சி சாலை கணேசபுரம் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்தில் 30 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் இருந்த சுமார் 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

உரிமையாளர் கைது

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த அதன் உரிமையாளர் ராசிபுரம் அருகே உள்ள சின்னகாக்காவேரி பகுதியை சேர்ந்த பூபதிகுமார் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக அவரிடம் ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது?, இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story