முதுநிலை படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு: மத்திய மந்திரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்..!


முதுநிலை படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு: மத்திய  மந்திரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்..!
x

சிறப்பு கலந்தாய்வினை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

சென்னை,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ,

முதுகலை மருத்துவப் படிப்பில் காலியாக உள்ள 128 இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வினை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் , முதுகலை சேர்க்கைக்கான கடைசி தேதியை நீட்டிக்க இந்திய தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்


Next Story