தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு தொழிலாளி பிணமாக மீட்பு


தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட    மேலும் ஒரு தொழிலாளி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:46 PM GMT)

தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டாா்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

விக்கிரவாண்டி அருகே உள்ள அத்தியூர்திருக்கை கிராமத்தை சேர்ந்தவர்கள் ரகு, காத்தவராயன். கட்டிட தொழிலாளிகள். இவர்கள் கடந்த 12-ந்தேதி மாலையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயனூர்-அருளவாடி தென்பெண்ணையாற்றின் தரைப்பாலத்தை கடக்க முயன்றனர். அப்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு இருந்ததால், இருவரும் அடித்து செல்லப்பட்டார்கள். இதையடுத்து, அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் மரகதபுரம் பகுதியில் காத்தவராயனை பிணமாக மீட்டனர். தொடர்ந்து, ரகுவை தேடு் பணியில் நேற்று 4-வது நாளாக ஈடுபட்டனர். அப்போது, நேற்று மாலையில் ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் ரகுவை, பிணமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து அவரது உடலை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டு இருப்பது, அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story