செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு!


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு!
x
தினத்தந்தி 1 Dec 2023 1:53 AM GMT (Updated: 1 Dec 2023 2:03 AM GMT)

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.65 அடியாக உள்ளது.

சென்னை,

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று காலை உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், உபரிநீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது உபரி நீர் வெளியேற்றம் 4 ஆயிரம் கன அடியில் இருந்து 402 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.65 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,028 கன அடியாகவும் உள்ளது.


Next Story