செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைப்பு!


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைப்பு!
x

சென்னையில் பெய்த கனமழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்று சென்னையில் தொய்வின்றி பெய்த மழையால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து. இதையடுத்து பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து நேற்று 8,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், மழை நின்ற நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 8,000 கன அடியில் இருந்து 3,822 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 8,514 கன அடியாக உள்ளது.


Next Story