சாரண ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி


சாரண ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
x

சாரண ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர், வேப்பூர் சாரண மாவட்டங்களை சேர்ந்த சாரண ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சாரணர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த முகாமினை பெரம்பலூர் மாவட்ட சாரண முதன்மை ஆணையரும், முதன்மை கல்வி அலுவலருமான மணிவண்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் சாரண ஆசிரியர்களுக்கு சாரண இயக்கம் பற்றியும், இதன் மூலம் மாணவர்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும், அனைத்து பள்ளிகளிலும் சாரண இயக்கம் தொடங்கி மிக சிறப்பாக நடத்துமாறு ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, சாரண இயக்க வரலாறு, அணி பயிற்சி, சாரண சட்டம், இறை வணக்கம் பாடல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் முதலுதவி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முகாம் தலைவராக மதுரை மேலூர் மாவட்ட சாரண உதவி ஆணையர் மகபூப் கான், உதவி பயிற்சியாளராக முசிறி மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் வேணுகோபால் ஆகியோர் செயல்பட்டனர். முகாமில் 124 சாரண ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட சாரண செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். முடிவில் வேப்பூர் மாவட்ட சாரண செயலாளர் தனபால் நன்றி கூறினார்.


Next Story