அமைச்சு பணியாளர் பணியிடை நீக்கம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அமைச்சு பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வந்தவர் விஸ்வநாதன். இவர் சக பெண் ஊழியருக்கு தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு புகார் வந்தது. இதையடுத்து விஸ்வநாதனை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார். அதன்படி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வட்டாரத்தில் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





