காந்திபுரம் 4-வது வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்


காந்திபுரம் 4-வது வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:47 PM GMT)

காந்திபுரம் 4-வது வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை காந்திபுரம் 4-வது வீதியில் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பொதுமக்களும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில், உதவி வருவாய் அலுவலர் கார்த்திகேயன், சுகாதார பணியாளர்கள்மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் 30-க்கும் மேற்பட்ட நிரந்தர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் ரோடுகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிக்கட்டு, விளம்பர பதாகைகள் ஆகியவை அகற்றப்பட்டன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியது வரவேற்கத்தக்கது. இதேபோல காந்திபுரம் பகுதியில் உள்ள வீதிகளில் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story