சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தான் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அந்த மேம்பாலத்தின் அணுகு சாலையோரத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் சாலையை ஆக்கிரமித்தும் கடைகளை வைத்திருந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று காலை போலீசார் பாதுகாப்புடன் அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்றனர். ஆனால் கடைக்காரர்களை தாமாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றினர். அவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் உதவினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





