ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

ரகுநாதசமுத்திரம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் அருகே உள்ள ரகுநாதசமுத்திரம், கிராமத்தை சேர்ந்தவர் பெரியாண்டவர், இவரது வீட்டின் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேஷன் கடை இயங்கி வருகிறது.

இதன் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பெரியாண்டவர், கற்களை கொட்டி நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் இடையூறாக உள்ள கற்களை அகற்றுமாறு பலமுறை பெரியாண்டவரிடம் கூறி வந்தனர். ஆனால் அவர் கற்களை அகற்றாமல் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஆகியோர் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கற்களை அகற்றினர்.


Next Story