சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

தஞ்சை டேனியல் தாமஸ் நகரில் இருந்து டி.பி.எஸ். நகர் வரை சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த சாலை 80 அடி சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.

தஞ்சாவூர்

தஞ்சை டேனியல் தாமஸ் நகரில் இருந்து டி.பி.எஸ். நகர் வரை சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த சாலை 80 அடி சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.

சாலை விரிவாக்கம்

தஞ்சை நம்பர் 1 வல்லம் சாலையில் உள்ள ரவுண்டானாவான டேனியல் தாமஸ் நகரில் இருந்து மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள டி.பி.எஸ்.நகர் வரையிலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி இந்த சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை 80 அடி சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கடை, வீடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது. அதன்படி சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர். அகற்றாத இடங்களில் மாநகராட்சி பொக்லின் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதனை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பார்வையிட்டார். மேலும் சாலை விரிவாக்கத்துக்காக தனியாரும் இடம் அளித்துள்ளனர்.அந்த இடத்தில் உள்ள சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்களும் இடிக்கப்பட்டன.

தொடர்ந்து டி.பி.எஸ். நகர் வரையிலான 2 கி.மீ. தூரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையடுத்து சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பங்களை அகற்றி விட்டு சாலை அகலப்படுத்தப்பட்ட பின்னர் மையப்பகுதியில் தடுப்புசுவர் அமைத்து அதில் மின்கம்பங்களை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story