போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மரங்கள் அகற்றம்


போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மரங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 25 Jun 2023 7:45 PM GMT (Updated: 25 Jun 2023 7:46 PM GMT)

போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மரங்கள் அகற்றம்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் கடந்த 11-ந் தேதி வீசிய சூறாவளி காற்றில் கோதவாடி செல்லும் சாலையோரம் உள்ள காந்தி பண்ணையில் நின்ற கொன்றை மரம், வடபுதூரில் இருந்து மாம்பள்ளி செல்லும் சாலையில் நின்ற மற்றொரு கொன்றை மரம் ஆகியவை முறிந்து விழுந்தது. இந்த மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்ததால், அதுகுறித்து 12-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மரங்களை வருவாய்த்துறையினர் அகற்றினார்கள். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story