சீர்காழியில், ரேஷன் கடை சீரமைப்பு


சீர்காழியில், ரேஷன் கடை சீரமைப்பு
x

சீர்காழியில் ரேஷன் கடை சீரமைக்கப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி

சீர்காழி தென்பாதி வி.என்.எஸ். நகரில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடை கட்டிடத்தின் தரைத்தளம், மேற்கூறைகள் சேதம் அடைந்ததால் மழைக்காலங்களில் மழை நீர் உட்பகுதி கட்டிடத்தில் இருந்த உணவுப் பொருள்கள் சேதம் அடைந்தது. இந்த கடை திட்டை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு தற்போது அரிசி உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் வாங்கி வருகின்றன. ஆனால் தற்போது செயல்படும் தனியார் கட்டிடத்தில் போதிய வசதி இல்லை.எனவே பூட்டி கிடக்கும் ரேஷன் கடையை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வௌியானது. இதன் எதிரொலியாக சேதம் அடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடையை அரசு தற்போது சீரமைத்துள்ளது. ரேஷன் கடையை சீரமைத்த அதிகாரிகளுக்கும் இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.


Next Story