கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

ஆண்டிமடம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த கூத்தப்பன் என்பவரது சினை பசுமாடு அப்பகுதி வயல்வெளியில் மேச்சலுக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து பசு மாட்டை மீட்க முயன்றனர். ஆனால் பசுமாட்டை மீட்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பசுமாட்டை கயிறு மூலம் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





