கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்த மயில் மீட்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு மயில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர். கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மயில் வனப்பகுதியில் விடப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





