வீட்டு கழிவறையில் புகுந்த மரநாய் மீட்பு

கடையம் அருகே வீட்டு கழிவறையில் புகுந்த மரநாய் மீட்கப்பட்டது.
கடையம்:
கடையம் அருகே ரவணசமுத்திரம் நெடுந்தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன். இவர் தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது, அங்கு மரநாய் ஒன்று நின்றதை கண்டு வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று கழிவறையில் பதுங்கி இருந்த மரநாயை பத்திரமாக மீட்டனர். பின்னர் அதை வாளையார் பீட் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





